விண்ணப்பித்துவிட்டீர்களா..? தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர்கள் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர்கள் வேலை

அனைவராலும் இ.பி.எப்.ஓ. என அழைக்கப்படும் மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள 280 உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத பட்டதாரி இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 280
சம்பளம்: மாதம் ரூ.44,900
வயது வரம்பு: 25.6.2019 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in அல்லது https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdfஎன்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயனடையவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2019

No comments:

Post a Comment