சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தோட்டக்காரர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பணி: தோட்டக்காரர் (Gardener)
காலியிடங்கள்: 24
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_86_2019eng.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2019
No comments:
Post a Comment