தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டி: தங்கம் வென்ற மாணவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 20, 2019

தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டி: தங்கம் வென்ற மாணவர்கள்

தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான யோகாசனப் போட்டி கடந்த மே 15-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது.


இப்போட்டியில் தமிழக அணி சார்பில் 16 மாணவர்கள் தேர்வாகினர். அதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்ஷினி, யுவஸ்ரீ, யுவலட்சுமி, காயத்ரி, அட்சயா, முகமது சையத், ஹரீஷ், முகமது ஜமால் ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஜூன் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை புதுதில்லியில் தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

 இதில், 16 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் பங்கேற்ற 8 மாணவர்கள் வியாழக்கிழமை தங்கப்பதக்கம் வென்றனர்.

இதில், 3 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அட்சயா (9-ஆம் வகுப்பு, சின்னகாஞ்சிபுரம், பிஎம்எஸ் மேல்நிலைப்பள்ளி), ஆர்.காயத்ரி (9-ஆம் வகுப்பு, பெரிய காஞ்சிபுரம், ஆற்காடு நாராயணசாமி மேல்நிலைப்பள்ளி), ஜி.முகமது ஜமால் (9-ஆம் வகுப்பு, ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளி) ஆகிய மூவரும் தங்கம் வென்றமைக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, யோகா பயிற்றுநர் டி.யுவராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்

No comments:

Post a Comment