10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கல்லூரி குழுவை கலைத்து உரிய விதிகளின்படி புதிய குழுவை அமைக்க வேண்டும்.


ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது காவல் துறையில் பொய் புகார் அளித்து போடப்பட்டுள்ள எப்ஐஆர்-யை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. சங்க தலைவர் பசுபதி தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.


முன்னாள் பொருளாளர் செந்தில்குமார், போராட்டத்தை ெதாடங்கி வைத்தார். இதில் 14 பேராசிரியைகள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment