தமிழ் இலக்கிய போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ் இலக்கியப் படைப்பாற்றலை வளர்த்திடும் வகையில் தமிழ் மன்றம் ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி வருகிறது.
2019-20ம் ஆண்டிற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களிடையே படைப்புத்திறனை வளர்க்கும் நோக்கில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறும் நாள் ஆகஸ்ட் 7. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகஸ்ட் 9ல் நடைபெறும்.
இப்போட்டியில் கலந்து கொள்வோர் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர், கல்லூரியின் முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரையைப் பெற்று போட்டி நாளன்று மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், உதவி இயக்குநர்களிடம் நேரில் அளிக்க வேண்டும்.
போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும்.. போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டு, பரிசுத்தொகை வழங்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
2019-20ம் ஆண்டிற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களிடையே படைப்புத்திறனை வளர்க்கும் நோக்கில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறும் நாள் ஆகஸ்ட் 7. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகஸ்ட் 9ல் நடைபெறும்.
இப்போட்டியில் கலந்து கொள்வோர் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர், கல்லூரியின் முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரையைப் பெற்று போட்டி நாளன்று மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், உதவி இயக்குநர்களிடம் நேரில் அளிக்க வேண்டும்.
போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும்.. போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டு, பரிசுத்தொகை வழங்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment