தமிழகத்தில் உருவானது புதிதாக இரு மாவட்டங்கள்... விரைவில் கும்பகோணம் 36வது மாவட்டமாக வாய்ப்பு..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 18, 2019

தமிழகத்தில் உருவானது புதிதாக இரு மாவட்டங்கள்... விரைவில் கும்பகோணம் 36வது மாவட்டமாக வாய்ப்பு..!

நிர்வாக வசதிகளுக்காக நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தையும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தையும் புதிதாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் 110 விதியில் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, ''அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நிர்வாக வசதிகளுக்காக இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி 33 வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களையும் சேர்த்து 35 மாவட்டங்களாக அதிரித்துள்ளன. தென்காசி மாவட்டத்திற்குள் குற்றாலம், புளியங்குடி கடையநல்லூர் ஆகிய பகுதிகள் அடங்கும்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டம் உருவாக்க கோரிக்கைகள் எழுந்து வருவதால் புதிதாக கும்பகோணம் மாவட்டம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment