B.E: ஜூலை 30-இல் எஸ்.சி.ஏ. உள் ஒதுக்கீட்டில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 25, 2019

B.E: ஜூலை 30-இல் எஸ்.சி.ஏ. உள் ஒதுக்கீட்டில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை

அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு ஆணையின்படி அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களில், எஸ்.சி. பிரிவினர் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர்.



இதற்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் ஜூலை 30-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.



இதில் பங்கேற்க விரும்பும் பட்டியலின மாணவர்கள் ஜூலை 30-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நேரில் பதிவு செய்யவேண்டும்இதற்கான அறிவிப்பு ஜூலை 28-ஆம் தேதி வெளியிடப்படும்.


ஏற்கெனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்ற பட்டியலின விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பினால், அவர்களுடைய அசல் சான்றிதழ்களுடனும், அசல் ஒதுக்கீட்டு ஆணையுடனும், பதிவு செய்து, சென்னையில் நேரடி கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள

No comments:

Post a Comment