பிச்சை எடுப்போருக்கு வேலை வழங்கும் மாநிலம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

பிச்சை எடுப்போருக்கு வேலை வழங்கும் மாநிலம்

உத்தரபிரதேசத்தில் வீடுகளற்று சாலையில் சுற்றித்திரிவோர் மற்றும் பிச்சை கேட்பவர்களுக்கு வேலைகள் வழங்க லக்னோ மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். அதிகம் பிச்சைக்காரர்கள் இருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.


 அம்மாநிலத்தில் 81,244 பிச்சைக்காரர்கள் உள்ளனர். 66,000க்கு மேலான பிச்சைக்காரர்களின் மாநிலமான உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 பீகார் மாநிலம் 30,000க்கு மேற்பட்ட பிச்சைக்காரர்களுடன் முன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு இப்பட்டியலில் 33வது இடத்தில் உள்ளது

இந்நிலையில் வேலை வழங்குவதற்காக சாலை ஓரங்களில் பிச்சை எடுத்து கொண்டிருப்பவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வீடின்றி தவிப்போரை உத்தரப்பிரதேச அரசு கணக்கெடுத்துவருகிறது. மேலும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக வேலை ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளது.

 பிச்சைக்காரர்களை தெருதெருவாக கணக்கெடுக்கும் பணியில் லக்னோ மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்.

No comments:

Post a Comment