வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய இயந்திரம் ஒன்றை சென்னை அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை...தமிழக அரசு பாராட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய இயந்திரம் ஒன்றை சென்னை அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை...தமிழக அரசு பாராட்டு

வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய வகையிலான வாக்குப்பதிவு இயந்திரத்தை சென்னை அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் ஜெபின், ஜெயச்சந்திரன், பிரதீப் குமார் என 3 மாணவர்கள் சேர்ந்து இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.


வாக்குப்பதிவின்போது, வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலான இந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஆதார் மூலம் கைரேகை மற்றும் கண் ரேகைகள் பதிவுகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.


ஒரு நபர் எங்கிருந்தாலும், தங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்கினை பதிவு செய்யும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், அருகில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் இந்த கருவியை பொருத்துவதன் மூலம், ஏடிஎம் இயந்திரத்தில் தங்கள் கைரேகையை வாக்காளர்கள் பதிவிட்டு, தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும். மாணவர்களின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, அவர்களுக்கு தலா 10,000 ஊக்கத்தொகையும் வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாணவர்கள் 3 பேருக்கும் ஊக்கத்தொகையை வழங்கினார்

No comments:

Post a Comment