உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,000 புத்தகங்களுடன் நுலகம் செயல்பட வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 5, 2019

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,000 புத்தகங்களுடன் நுலகம் செயல்பட வேண்டும்

அரசு மற்றும் அரசு உதவிபெறும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் குறைந்தது, 1,000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஒவ்வொரு அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது, 1,000 புத்தகங்கள் உள்ளவாறு பள்ளி நுாலகம் செயல்பட வேண்டும்.

 இந்நுாலகத்துக்கு, தினமும் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் வாங்கி, மாணவர்கள் படிக்க அறிவுறுத்த வேண்டும்.

நுாலகப் பணியை மேற்கொள்ள, ஒரு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் நுாலகம் பயன்படுத்தும் திறனை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரம், மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு அளித்து, வாசிக்கும் திறன், பேச்சு திறன், எழுத்து திறன், ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment