மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கை: செப்.3-இல் தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 28, 2019

மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கை: செப்.3-இல் தொடக்கம்

மூன்றாண்டு (எல்.எல்.பி.) சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.


அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கான 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.


முன்னதாக, 5 ஆண்டுகள் சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இப்போது மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கையை பல்கலைக்கழகம் தொடங்க உள்ளது.



இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு தேதி குறித்த விவரங்களை பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டது.


அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் விரைவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.



அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத, தகுதிவாய்ந்த மாணவர்களும் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment