பேராசிரியர்களின் வீடுகளுக்கு மாணவியர் செல்ல பல்கலை நிர்வாகம் தடை: சென்னைப் பல்கலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 31, 2019

பேராசிரியர்களின் வீடுகளுக்கு மாணவியர் செல்ல பல்கலை நிர்வாகம் தடை: சென்னைப் பல்கலை

சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர்களின் வீடுகளுக்கு மாணவியர் செல்ல பல்கலை நிர்வாகம் தடை விதித்துள்ளது. பல்கலை பேராசிரியர்களுடன் கல்விச் சுற்றுலா செல்லவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு எந்த விதத்திலும் இடம் தரக்கூடாது என்று பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது கடுமையாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேராசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் துணைவேந்தரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று பதிவாளர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment