பிரியாவிடை நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

பிரியாவிடை நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர்

அரியானாவில் குரே ராம் என்ற 60 வயது ஆசிரியர் நீம்கா என்ற அரசு பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார். அவர் ஓய்வு பெறும் நாளன்று ஹெலிகாப்டரில் வர வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார்.


 சொந்தமாக விவசாய நிலம் கூட இல்லாத அவரது குடும்பத்தினர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர்.


வெறும் இரண்டே கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளியில் இருந்து குரே ராம் தன் சொந்த ஊரான சத்புரா கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டார்.


 தற்காலிக ஹெலிபேடு இருக்கும் இடத்தில் கூடிய கிராம மக்கள் அவரை மேள தாளங்களோடு உற்சாகமாக வரவேற்றனர்.

No comments:

Post a Comment