அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் நேற்று காலமானார்.
திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் (61). இவர் கடந்த 1996ல் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மீன்வளத் துறை அமைச்சரானார். 1996 முதல் 2001 வரை அமைச்சராக பதவி வகித்தார்.
2004ல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2008ல் அக்கட்சி மாநில மீனவரணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமின்றி பாதிக்கப்பட்ட அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் 2.15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் (61). இவர் கடந்த 1996ல் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மீன்வளத் துறை அமைச்சரானார். 1996 முதல் 2001 வரை அமைச்சராக பதவி வகித்தார்.
2004ல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2008ல் அக்கட்சி மாநில மீனவரணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமின்றி பாதிக்கப்பட்ட அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் 2.15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் திருச்செந்தூர் அமலிநகருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று (7ம் தேதி) மாலை 4 மணிக்கு திருச்செந்தூரில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இவரது கணவர் சந்திரன். இவர்களுக்கு விஜயன் என்ற ஒரு மகன் உள்ளார். ஜெனிபர் சந்திரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment