எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., விண்ணப்பம் இறுதி வாய்ப்பை தவற விடாதீர்கள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 2, 2019

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., விண்ணப்பம் இறுதி வாய்ப்பை தவற விடாதீர்கள்!

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க, இன்றுடன், கால அவகாசம் நிறைவு பெறுகிறது.


அரசு, இட ஒதுக்கீட்டில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், ஆண்டுதோறும் நடத்தப்படும்.

அரசு, அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லுாரிகள், அண்ணா பல்கலை மண்டல மையங்கள், அண்ணா, பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார், சென்னை பல்கலைகள் ஆகியவற்றிற்கு, கலந்தாய்வு நடைபெறும்.

எம்..பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க, இன்றுடன், கால அவகாசம் நிறைவு பெறுகிறது.


அனைத்து பல்கலை, கல்லுாரிகளையும் சேர்த்து, எம்.பி.ஏ., பிரிவில், 14 ஆயிரம் இடங்களும், எம்.சி.ஏ., பிரிவில், 12 ஆயிரம்இடங்களும் உள்ளன. இதுவரை, 8,000 மாணவர்களே விண்ணப்பித்துள்ள நிலையில், அனைவருக்கும், விரும்பிய இடங்கள் கிடைக்கும்

அரசு தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர், தாமரை கூறியதாவது:விண்ணப்பங்களை, ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. '


ஆன்லைன்' மூலம் விண்ணப்பிப்பவர்கள், வங்கி வரைவோலையுடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

வரும், 11ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு, 17ம் தேதி முதல் துவங்கும். விபரங்களுக்கு,
http://www.tn-mbamca.com/
என்ற இணையதளத்தை பார்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment