செப்டம்பர் வரை சி.பி.எஸ்.இ., 'அட்மிஷன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

செப்டம்பர் வரை சி.பி.எஸ்.இ., 'அட்மிஷன்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செப்டம்பர் வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர் சேர்க்கை, ஏப்ரலில் துவங்கும். பெரும்பாலான பள்ளிகளில், மே மாதம், புதிய வகுப்புகள் துவங்கும் என்பதால், அதற்குள் மாணவர்கள் சேர்ந்து விடுவர்.


ஆனாலும், இடமாற்றம் பெறும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளை, பள்ளிகளில் சேர்க்க வசதியாக, ஆகஸ்ட் வரையிலும், மாணவர் சேர்க்கை தொடரும்.


இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆகஸ்டில் முடியும் நிலையில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பில் மட்டும், செப்டம்பர் வரையிலும் மாணவர்களை சேர்க்கலாம் என, சி.பி.எஸ்.இ., அனுமதி அளித்துள்ளது

No comments:

Post a Comment