தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வினை 10ம் தேதி(இன்று) மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நடத்த உள்ளது.
இந்நிலையில் உதகமண்டலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தேர்வு நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலும் அம்மாவட்ட விண்ணப்பதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் உதகமண்டலம் (ஊட்டி) மாவட்டத் தேர்வு மையத்திற்கு மட்டும் இத்தேர்வினை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வு மையத்திற்கான தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். உதகமண்டலம் தவிர மற்ற மாவட்டங்களில் கண்டிப்பாக அறிவித்தபடி 10ம் தேதி(இன்று)தேர்வு நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வினை 10ம் தேதி(இன்று) மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நடத்த உள்ளது.
இந்நிலையில் உதகமண்டலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தேர்வு நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலும் அம்மாவட்ட விண்ணப்பதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் உதகமண்டலம் (ஊட்டி) மாவட்டத் தேர்வு மையத்திற்கு மட்டும் இத்தேர்வினை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வு மையத்திற்கான தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். உதகமண்டலம் தவிர மற்ற மாவட்டங்களில் கண்டிப்பாக அறிவித்தபடி 10ம் தேதி(இன்று)தேர்வு நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment