பணி நீக்கம் செய்த ஆசிரியரை மீண்டும் நியமிக்ககோரி மாணவர்கள் மறியல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 30, 2019

பணி நீக்கம் செய்த ஆசிரியரை மீண்டும் நியமிக்ககோரி மாணவர்கள் மறியல்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம், ஐப்பேடு கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டு கடந்த 8  ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.


இந்நிலையில், ஆசிரியர் நாராயணன் கடந்த வாரம் பணி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார்.


இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள், ஆசிரியர் நாராயணன் நன்றாக பாடம் நடத்துகிறார், அவரையே மீண்டும் நியமிக்கவேண்டும்’ என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்தக்கோரி அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் பள்ளி எதிரே மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த, சோளிங்கர் போலீசார் வந்து மாணவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் என்றனர்.


இதையடுத்து, மாணவர்கள் பள்ளி நுழைவாயில் முன் அமர்ந்து, ‘நாராயணனை ஆசிரியராக  நியமிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம்’ எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.


அவர்களிடம் போலீசார், தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment