சிறந்த ஆசிரியர் பயிற்றுநர் விருது: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 29, 2019

சிறந்த ஆசிரியர் பயிற்றுநர் விருது: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிறந்த ஆசிரியர் பயிற்றுநருக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விருதுக்கு செப்டம்பர் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் சிறந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கௌரவிக்கவும், ஊக்குவிக்கும் வகையிலும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது


. ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், வாழ்த்து மடலையும் கொண்டது இந்த விருது.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முன்னர் ஆகஸ்ட் 16 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது


இப்போது இந்த கால அவகாசம் செப்டம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை www.ncte.gov.in
இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

1 comment:

  1. ஆசிரியப் பயிற்றுநர்கள் அல்ல .கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் அவர்கள்.

    ReplyDelete