தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 4 எழுத்துத் தேர்வை 13.52 லட்சம் பேர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
பழைய பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள்
குரூப் 4 வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பழைய பாடத் திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. அதாவது சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் மிகவும் சிக்கலான முறையில் யோசித்து பதில் அளிக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வில் அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், நேரடியாக பதில் அளிக்கக் கூடிய வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக கணிதத்தில் கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததாகத் தெரிவித்தனர். புதிய பாடத் திட்டத்தின் கீழ் அதிகமாகப் படித்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக தேர்வர்கள் கூறினர்.
தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
பழைய பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள்
குரூப் 4 வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பழைய பாடத் திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. அதாவது சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் மிகவும் சிக்கலான முறையில் யோசித்து பதில் அளிக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வில் அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், நேரடியாக பதில் அளிக்கக் கூடிய வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக கணிதத்தில் கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததாகத் தெரிவித்தனர். புதிய பாடத் திட்டத்தின் கீழ் அதிகமாகப் படித்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக தேர்வர்கள் கூறினர்.
No comments:
Post a Comment