சிறந்த ஆசிரியர் விருதுக்கு 46 ஆசிரியர்கள் தேர்வு : தமிழகத்தில் இரண்டு ஆசிரியர்கள் தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 1, 2019

சிறந்த ஆசிரியர் விருதுக்கு 46 ஆசிரியர்கள் தேர்வு : தமிழகத்தில் இரண்டு ஆசிரியர்கள் தேர்வு

ஆசிரியர் பணியை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் இந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களாக 46 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் டைமண்ட் ஜூப்லி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.மன்சூர்அலி, கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆர்.செல்வகண்ணன் ஆகிய 2 பேர் இடம் பெற்று உள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் கூனிச்சம்பேட் பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் எஸ்.சசிகுமாரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்று இருக்கிறார்இ்

இவர்களுக்கு ஆசிரியர் தினமான வருகிற 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment