தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பதை ஏற்க முடியாது என்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்தியை திணிக்க முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் தடையை மீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் துணை நிலை ஆளுநர் தடையாக உள்ளதாகவும் கூறினார். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்தால் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா?என்பது பற்றி கல்வி அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்
பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்தியை திணிக்க முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் தடையை மீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் துணை நிலை ஆளுநர் தடையாக உள்ளதாகவும் கூறினார். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்தால் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா?என்பது பற்றி கல்வி அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்
No comments:
Post a Comment