சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்; ஒப்படைத்த மாணவியருக்கு பாராட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 7, 2019

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்; ஒப்படைத்த மாணவியருக்கு பாராட்டு

சாலையில் கேட்பாரற்று கிடந்த, 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த, நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.விழிப்புணர்வு பேரணி: திருச்சி, பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனூரில், புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.'


தூய்மை பாரதம்' திட்டம் குறித்து, இப்பள்ளி மாணவ மாணவியர், நேற்று காலை, விழிப்புணர்வு பேரணி சென்றனர். தாயனூர் மேலக்காடு என்ற இடத்தில், பேரணி செல்லும்போது, 50 ஆயிரம் ரூபாய் சாலையில் கிடந்துள்ளது.


 இதைப் பார்த்த, பள்ளியின், 4ம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவியரான, மதுஸ்ரீ, கனிஷ்கா ஆகியோர், பணத்தை எடுத்து, உடனடியாக, அருகில் இருந்த, ஆசிரியையிடம் ஒப்படைத்தனர்.அவர், பள்ளிக்கு வந்ததும், தலைமை ஆசிரியர், மெட்டில்டா ஜெயராணியிடம் ஒப்படைத்தார்.தாளாளர் வாழ்த்து: இதைக் கேள்விப்பட்ட, பள்ளி தாளாளர், செபாஸ்டின் மற்றும் ஊர் மக்கள், ஏழ்மையிலும் நேர்மையாக நடந்த மாணவியரை பாராட்டி, வாழ்த்தினர். இது குறித்து, பள்ளி தாளாளர், செபாஸ்டின் கூறியதாவது:


இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும், நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மதுஸ்ரீயின் தந்தை, கல் கொத்துபவர். கனிஷ்காவின் தந்தை, பெயின்டர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.கவுரவிக்க முடிவு: அப்படி இருந்தும், 50 ஆயிரம் பணத்தை எடுத்து, நேர்மையுடன் கொடுத்த மாணவியரை, பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களை, பள்ளி சார்பில் கவுரவிக்க உள்ளோம். கண்டெடுத்த பணம், போலீசில் ஒப்படைக்கப்பட்டு, உரியவரிடம் கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment