தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 17, 2019

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

கல்விக் கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்களை, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட`உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்து 558 பயனாளிகளுக்கு 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அந்தியூர் வறட்சியான பகுதியாக உள்ளதால், தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
கல்விக் கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் எச்சரித்தார்.

No comments:

Post a Comment