லஞ்சம் வாங்க மாட்டோம்' :'வாட்ஸ் ஆப்' குரூப் உதயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

லஞ்சம் வாங்க மாட்டோம்' :'வாட்ஸ் ஆப்' குரூப் உதயம்

வி.ஏ.ஓ., அலுவலகம் என்றாலே, லஞ்சமின்றி வேலை நடக்காது என்கிற எண்ணம், மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

அந்த அளவுக்கு லஞ்சம் கேட்கும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலமும், கருணை அடிப்படையிலும் சேர்ந்த வி.ஏ.ஓ.,க் கள் சிலர் இணைந்து, புதிதாக 'வாட்ஸ் ஆப்' குரூப் துவக்கியுள்ளனர். இவர்களது நோக்கம் வருங்கால அதிகாரிகளுக்கு ஓர் உந்துகோலாக அமைந்துள்ளது.

இவர்கள் உருவாக்கியுள்ள, 'வாட்ஸ் ஆப்' குரூப் பெயர், 'லஞ்சம் வாங்க மாட்டோம்'. கடந்த மே மாதம் துவங்கப்பட்ட இக்குழுவில், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 15 பேர் இணைந்துள்ளனர்.

இவர்கள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'நேர்மையாக செயல்படுபவர்களை அடையாளம் காண்பது சவாலான காரியமாக உள்ளது. ஊழலுக்கு எதிராக ஒத்த கருத்து உடையவர்கள் ஒரு குழுவை துவக்கியுள்ளோம்.

எந்த சூழலிலும், லஞ்சம் வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். நல்ல நோக்கத்தோடு துவக்கியுள்ளோம். எங்களை அடையாளப்படுத்த விருப்பமில்லை' என்றார்.

No comments:

Post a Comment