வனக்காவலர் பணி தேர்வு தேதி மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 2, 2019

வனக்காவலர் பணி தேர்வு தேதி மாற்றம்

தமிழகத்தில், வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வில் பங்கேற்க, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


 இவர்களுக்கான தேர்வு, அக்டோபர், 5ல் துவங்கும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்து இருந்தது. தற்போது, இந்த தேர்வு நடைமுறையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.


இதன்படி, அக்., 4, 5, 6ல், ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு அமர்வுகள் வீதம், மூன்று நாட்களில், ஆறு அமர்வுகளாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment