1¼ லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் நியமனம் செய்த முதலமைச்சர்! முழு திட்டத்தை கேட்டால் அசந்து போயிடுவீங்க! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 1, 2019

1¼ லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் நியமனம் செய்த முதலமைச்சர்! முழு திட்டத்தை கேட்டால் அசந்து போயிடுவீங்க!

ஆந்திர மாநில அரசு, புதிய நிர்வாக நடைமுறையாக, கிராமங்களில் கிராம செயலகத்தையும், நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் புதியதாக உருவாக்குகிறது. இந்த செயலகங்களில் 500 வகையான பொது சேவைகள் வழங்கப்படும்.

கிராம செயலகத்தில் நடவுள்ள பணிகள் பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், வேளாண்மை, சமூக நலம் ஆகியவை தொடர்பான சேவைகளும், நகர்ப்புறங்களில் நகராட்சி தொடர்பான சேவைகளும் வழங்கப்படும்.


 இதற்கு பணியாற்றுவதற்கான நிரந்தர ஊழியர்களை தேர்வு செய்ய முடிவு செய்த ஆந்திர அரசு, கடந்த 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிவரை அரசு எழுத்து தேர்வு நடைபெற்றதுஇந்த
தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 19 லட்சத்து நபர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதியவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 164 பேர் தகுதி பெற்றனர். அவர்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் நகர்ப்புறங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 31 ஆயிரத்து 640 பேர் ஆவர்.

விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நியமன ஆணைகள் வழங்கும் பணியை நேற்று தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் ஜெகன் மோகன் பேசியதாவது, இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டது, இதுதான் முதல்முறை என்று பெருமிதமாக கூறினார்.


மேலும், வெறும் இரண்டே மாதங்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஊழல் இல்லாத அரசு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய இனிமேல் ஆண்டுதோறும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 31-ந் தேதிவரை தேர்வு நடத்தப்படும் என்றார்.

ஆந்திரா மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்து 158 கிராம செயலகங்களும், 3 ஆயிரத்து 786 வார்டு செயலகங்களும் தற்போது திறக்கப்படுகின்றன. டிசம்பர் மாதம் முதலாவது வாரத்தில் இருந்து இவை செயல்பட தொடங்கும்.


அதன்படி ஒவ்வொரு செயலகத்திலும் 10 முதல் 12 ஊழியர்கள் இருப்பார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனைக்காக ஒரு பெண் போலீசும், பெண்கள் நல உதவியாளரும் இருப்பார்கள்.

கிராம செயலகத்தையும், நகர்ப்புறங்களில் உள்ள வார்டு செயலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு உதவுவதற்காக கிராம, வார்டு தன்னார்வ தொண்டர்களும் இருப்பார்கள்.

அந்த தொண்டர்கள் பணிக்கு 2 லட்சத்து 80 ஆயிரம்பேர் ஏற்கனவே ஆந்திர அரசால் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment