பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வீட்டில் 1 லட்சம் மதிப்புள்ள ஐ-போன், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னை தி.நகர் கிருஷ்ணா தெருவில் வசித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் இரண்டாவது மாடியில் பாரதிராஜா இருந்துள்ளார். அன்று இரவு வீட்டின் பின்பக்க கதவை தாழ்ப்பாள் போடவில்லை என்று கூறப்படுகிறது
.மறுநாள் காலையில் பாரதிராஜா எழுந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 1 லட்சம் மதிப்புள்ள ஐ-போன் மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாரதிராஜா வீட்டில் தங்கி இருந்த அவரது மேலாளரிடம் கேட்டுள்ளார். அப்போது யாரும் செல்போன் மற்றும் வெள்ளிப் பொருட்கள் எடுக்க வில்லை என்று தெரிகிறது.அதைதொடர்ந்து, பாரதிராஜா சம்பவம் குறித்து மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மூடப்படவில்லை என்று தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டிற்குள் புகுந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தெரிந்தவர்கள்தான் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை திருடி சென்று இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரபல இயக்குநர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னை தி.நகர் கிருஷ்ணா தெருவில் வசித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் இரண்டாவது மாடியில் பாரதிராஜா இருந்துள்ளார். அன்று இரவு வீட்டின் பின்பக்க கதவை தாழ்ப்பாள் போடவில்லை என்று கூறப்படுகிறது
.மறுநாள் காலையில் பாரதிராஜா எழுந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 1 லட்சம் மதிப்புள்ள ஐ-போன் மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாரதிராஜா வீட்டில் தங்கி இருந்த அவரது மேலாளரிடம் கேட்டுள்ளார். அப்போது யாரும் செல்போன் மற்றும் வெள்ளிப் பொருட்கள் எடுக்க வில்லை என்று தெரிகிறது.அதைதொடர்ந்து, பாரதிராஜா சம்பவம் குறித்து மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மூடப்படவில்லை என்று தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டிற்குள் புகுந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தெரிந்தவர்கள்தான் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை திருடி சென்று இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரபல இயக்குநர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment