தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, 31ம் தேதிக்குள், விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்
.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
. இந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, டிச., 1ல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, செப்., 26ல் துவங்கியது; அக்., 11ல் முடிந்தது. இந்த விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆன்லைன் வழியாக, அரசு தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
இந்த பதிவுக்கு, அக்டோபர், 16 வரை அவகாசம் தரப்பட்டது. அதன்பின், வரும், 31 வரை நீட்டிக்கப் பட்டது. கடைசி நாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், விரைந்து விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
. இந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, டிச., 1ல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, செப்., 26ல் துவங்கியது; அக்., 11ல் முடிந்தது. இந்த விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆன்லைன் வழியாக, அரசு தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
இந்த பதிவுக்கு, அக்டோபர், 16 வரை அவகாசம் தரப்பட்டது. அதன்பின், வரும், 31 வரை நீட்டிக்கப் பட்டது. கடைசி நாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், விரைந்து விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment