36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 1, 2019

36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை!

ஒன்றரை நாளில் (36 மணி நேரம்) ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகியுள்ளதாக இணைய வர்த்தக தளமான அமேசான் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் இரண்டும் இணைய வர்த்தகத்தில் கோலோச்சி நிற்கும் தளங்களாகும். இவ்விரண்டுமே வருடத்தில் நானகைந்து தடவை இணையத்தில் வர்த்தகத் திருவிழாவை நடத்துவ வழக்கம். அந்த சமயத்தில் மிக குறுகிய காலத்திற்கு பல்வேறு விதமான வீட்டு உபயோகப் பொருட்கள், மின்ணனு சாதனங்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களும் மிக அதிக தள்ளுபடியில் கிடைக்கும்.

இம்முறை அமேசான் நிறுவனம் சார்பாக ஞாயிற்றுக் கிழமை (29.09.19) துவங்கி, எதிர்வரும் 4-ஆம் தேதி வரை 'தி கிரேட் இந்தியன் ஷாப்பிங் பெஸ்டிவல்' என்னும் பெயரில் இணையத்தில் வர்த்தகத் திருவிழா நடந்து வருகிறது.

அதன்படி அந்த வர்த்தகம் துவங்கிய ஒன்றரை நாளில் (36 மணி நேரம்) ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகியுள்ளதாக அமேசான் தற்போது தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment