ரேடார் சென்சார் கருவியுடன் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 16, 2019

ரேடார் சென்சார் கருவியுடன் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட் போன்கள் நியூயார்க்கில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

மிக மெலிதான வடிவமைப்புடன், சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில், ரேடார் சென்சார் கருவிகள், கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் உயர் தர கேமரா வசதிகளும் இடம்பெற்றுள்ளன.


அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர விலையில் உருவாக்கப்பட்டுள்ள Pixelbook Go laptop, வயர்லெஸ் இயர்பட்ஸ், வைபை ரூட்டர், பர்கர் அளவிலான ஸ்பீக்கர் ஆகியவற்றையும் நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட செல்போன்களின் விலை 57 ஆயிரம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.

No comments:

Post a Comment