திண்டுக்கல்லை கலக்கிய 5 பைசா பிரியாணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 16, 2019

திண்டுக்கல்லை கலக்கிய 5 பைசா பிரியாணி

பழைய ஐந்து பைசாவிற்கு திண்டுக்கல்லில் 1/2 பிளேட் பிரியாணி என அறிவிக்கப்பட்டதையடுத்து பழைய 5 பைசாக்களுடன் மக்கள் குவிந்தனர்.


திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள முஜீப் பிரியாணி கடையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பழைய 5 பைசாவை கொண்டுவரும் முதல் 100 பேருக்கு 1/2 பிளேட் கோழி பிரியாணி வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து காலை முதலே கடை முன் பழைய 5 பைசாவுடன் மக்கள் குவியத் தொடங்கினர். அவர்களின் பெயர் மற்றும் செல்ஃபோன் எண்களை பெற்றுக்கொண்டு பிரியாணி, தயிர் வெங்காயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.கீழடியில் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ள நிலையில் வருங்கால சந்ததியினருக்கு நாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நாணயங்களின் மதிப்பை விளக்கும் விழிப்புணர்வு முயற்சியாகவே 5 பைசா பிரியாணி வழங்கப்பட்டதாக கடை உரிமையாளர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்

No comments:

Post a Comment