தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுஇந்த மருத்துக்கல்லூரிகளை அமைக்க மொத்தம் ரூ. 325 கோடி செலவாகும் . இதில் 80 சதவீத தொகையை அதாவது ரூ. 195 கோடியை மத்திய அரசு தனது பங்காக வழங்க உள்ளது.
அதேசமயம் மாநில அரசின் பங்காக ரூ. 130 கோடி இருக்கும்.
இதற்கான அதிகாரபூர்வ ஒப்புதலானது முறைப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூலம், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுஇந்த மருத்துக்கல்லூரிகளை அமைக்க மொத்தம் ரூ. 325 கோடி செலவாகும் . இதில் 80 சதவீத தொகையை அதாவது ரூ. 195 கோடியை மத்திய அரசு தனது பங்காக வழங்க உள்ளது.
அதேசமயம் மாநில அரசின் பங்காக ரூ. 130 கோடி இருக்கும்.
இதற்கான அதிகாரபூர்வ ஒப்புதலானது முறைப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூலம், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment