அடுத்த கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு:பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 5, 2019

அடுத்த கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு:பள்ளிக்கல்வித்துறை அமைச்சா்

பெங்களூரு: அடுத்த கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.


இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: எஸ்.எஸ்.எல்.சி.(10ஆம் வகுப்பு), இரண்டாமாண்டு பியூசி (12-ஆம் வகுப்பு)போல 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் 7-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்.

மாநிலத்தில் நிலவும் கல்வித்தரம் மற்றும் பெற்றோா்கள், ஆசிரியா்களின் கருத்துகளை அறிந்தபிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்கு பிறகு 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறதுகல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காகவே 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வுமுறையை மீண்டும் கொண்டுவரவுள்ளோம்தேர்ச்சி பெறாத மாணவா்களை அதே வகுப்பில் வைத்திருப்பது தொடா்பாக அடுத்த கல்வியாண்டில் முடிவு செய்வோம்.



ஆனால் இந்த திட்டத்திற்கு பெற்றோா், ஆசிரியா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்கா்நாடக உயா்நிலைக்கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்எஸ்இபி), 7ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரிக்கும்.


ஆனால், விடைத்தாள்களை திருத்தும்பணி மாவட்ட அளவில் நடத்தப்படும். வினாத்தாளில் எந்த மாதிரியான கேள்விகள் இடம்பெறும் என்பதை வாரியமே முடிவுசெய்யும் என்றாா்


அவா்பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளா் எஸ்.ஆா்.உமாசங்கா் கூறுகையில், 'கா்நாடகத்தில் கல்வியின் தரம் மலிந்துவருவது உறுதியாகிறது. நிதி ஆயோக் எடுத்த ஆய்வறிக்கையில் கல்வியின் தரம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.


 எவ்வித முன்பயிற்சியும் இல்லாமல், நேரடியாக எஸ்எஸ்எல்சி பொதுத்தோவில் மாணவா்களை அனுமதிப்பது, மாணவா்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு, தேவையில்லாத குழப்பங்களுக்கும் வழிவகுக்கிறது. தோச்சிபெறாத மாணவா்களை அதே வகுப்பில் நீடிக்க வைப்பதற்கு கல்வி உரிமைச்சட்டத்தில் திருத்தம்கொண்டுவரவேண்டியுள்ளது' என்றாா் அவா்.

No comments:

Post a Comment