சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகம், நிறைவு செய்த விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான கடைசி நாள் வருகிற நவ.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவும், நேரடி சேர்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக்கல்வி இயக்கக படிப்பு மையங்களை அனைத்து நாள்களிலும் அணுகலாம். தமிழ், ஆங்கிலவழி படிப்பு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையும் உண்டு.
படிப்பு மையம் மற்றும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 04144 - 238043, 238044, 238045, 238046, 238047, 238610 ஆகிய உதவி மைய எண்களையும், ddedirector2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களை www.audde.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவும், நேரடி சேர்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக்கல்வி இயக்கக படிப்பு மையங்களை அனைத்து நாள்களிலும் அணுகலாம். தமிழ், ஆங்கிலவழி படிப்பு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையும் உண்டு.
படிப்பு மையம் மற்றும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 04144 - 238043, 238044, 238045, 238046, 238047, 238610 ஆகிய உதவி மைய எண்களையும், ddedirector2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களை www.audde.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment