ரஜினி மக்கள் மன்றத்தினர், வடசென்னையில் உள்ள, மாநகராட்சி பள்ளி களை தத்தெடுத்து, புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை, ஷெரியன் நகரில், சென்னை உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் கல்வி கற்கின்றனர்.
இப்பள்ளி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி காட்சியளித்தது. இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தினர், இப்பள்ளியை தத்தெடுத்து, புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், பள்ளிகளின் வகுப்பறைகளை மேம்படுத்துதல், மேஜை, நாற்காலி வசதிகள் செய்து தருதல், வண்ணம் பூசுதல், தண்ணீர் வசதி செய்து தருதல், கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல், உடைந்த கதவுகளை புதுப்பித்தல், தொடுதிரை கல்வி வசதி செய்து தருதல் உள்ளிட்ட பணிகளை, 3.5 லட்சம் ரூபாய் செலவில் செய்து வருகின்றனர்.
மேலும், ஆர்.கே.நகரில் உள்ள மூன்று பள்ளிகளை தத்தெடுத்து, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை, ஷெரியன் நகரில், சென்னை உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் கல்வி கற்கின்றனர்.
இப்பள்ளி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி காட்சியளித்தது. இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தினர், இப்பள்ளியை தத்தெடுத்து, புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், பள்ளிகளின் வகுப்பறைகளை மேம்படுத்துதல், மேஜை, நாற்காலி வசதிகள் செய்து தருதல், வண்ணம் பூசுதல், தண்ணீர் வசதி செய்து தருதல், கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல், உடைந்த கதவுகளை புதுப்பித்தல், தொடுதிரை கல்வி வசதி செய்து தருதல் உள்ளிட்ட பணிகளை, 3.5 லட்சம் ரூபாய் செலவில் செய்து வருகின்றனர்.
மேலும், ஆர்.கே.நகரில் உள்ள மூன்று பள்ளிகளை தத்தெடுத்து, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment