முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபாலில் ஓட்டளிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 28, 2019

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபாலில் ஓட்டளிக்கலாம்

பொது தேர்தலிகளில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இனி தபால் மூலம் ஓட்டளிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.


பொது தேர்தல்களின் போது, முப்படைகளை சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், தங்கள் ஓட்டுக்களை அளிக்க, ஓட்டுச்சாவடிக்கு வரமுடியாது.


 இதனால், அவர்கள், தபால் மூலம் ஓட்டளிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. இதைப் போலவே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் உடல்நிலை காரணமாக, ஓட்டுச்சாவடி வரை வரமுடியாத நிலை உள்ளது



. இதை தவிர்க்கும் வகையில், அவர்களையும் தபால் ஓட்டு அளிக்க, வழிவகை செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்தது.இதை ஏற்ற மத்திய சட்டத்துறை அமைச்சகம், தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்தது.


அதன் படி, 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும், அடுத்த தேர்தல் முதல், தபால் மூலம் தங்கள் ஓட்டு அளிக்கலாம் என, மத்திய அரசு, அறிவித்துள்ளது. இதன் மூலம், ஓட்டளிப்பவர்களின் எண்ணிக்கை, கணிசமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment