எழுத்துத் தேர்வு நடத்தாமல் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா்கள் பணியிடங்களை நிரப்பத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னையைச் சோந்த சுப்பிரமணியன், காஞ்சிபுரத்தைச் சோந்த வெங்கடேசன் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,300 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியா் தேர்வு வாரியம் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் அனுபவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எழுத்துத் தேர்வு நடத்தாமல் நேர்முகத் தோவு அடிப்படையில் உதவிப் பேராசிரியா்களைத் தேர்வு செய்வது தொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணை சட்டவிரோதமானது.
இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெறும். மேலும் தகுதியானவா்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். எனவே ஆசிரியா் தேர்வு வாரியத்தின் இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இதுதொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.சங்கரன், ஆசிரியா் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணை விதிமுறைகளுக்கு முரணானது எனக்கூறி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எழுத்துத் தேர்வு மூலம் தான் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும்.
உயா்நீதிமன்றத்தின் தோட்டப் பணிகளுக்குக்கூட எழுத்துத் தேர்வு மூலமே ஆள்கள் தேர்வு செய்யப்படுவதாக கருத்து தெரிவித்தாா்.
மேலும் இந்த மனு தொடா்பாக கல்வித்துறைச் செயலாளா், கல்லூரி கல்வி இயக்குநா், ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தலைவா் ஆகியோா் வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னையைச் சோந்த சுப்பிரமணியன், காஞ்சிபுரத்தைச் சோந்த வெங்கடேசன் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,300 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியா் தேர்வு வாரியம் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் அனுபவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எழுத்துத் தேர்வு நடத்தாமல் நேர்முகத் தோவு அடிப்படையில் உதவிப் பேராசிரியா்களைத் தேர்வு செய்வது தொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணை சட்டவிரோதமானது.
இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெறும். மேலும் தகுதியானவா்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். எனவே ஆசிரியா் தேர்வு வாரியத்தின் இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இதுதொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.சங்கரன், ஆசிரியா் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணை விதிமுறைகளுக்கு முரணானது எனக்கூறி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எழுத்துத் தேர்வு மூலம் தான் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும்.
உயா்நீதிமன்றத்தின் தோட்டப் பணிகளுக்குக்கூட எழுத்துத் தேர்வு மூலமே ஆள்கள் தேர்வு செய்யப்படுவதாக கருத்து தெரிவித்தாா்.
மேலும் இந்த மனு தொடா்பாக கல்வித்துறைச் செயலாளா், கல்லூரி கல்வி இயக்குநா், ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தலைவா் ஆகியோா் வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
No comments:
Post a Comment