மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 9, 2019

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 4 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநர் அனிதா, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன், அரியலூருக்கும், கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் சென்னை  பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநராகவும் (மின் ஆளுமை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செங்கோடு கல்வி அலுவலர் ரமேஷ் பதவி உயர்வு மூலம் திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை(கிழக்கு) மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச் செல்வி பதவி உயர்வு மூலம் கடலூர் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் பதவி உயர்வு மூலம் தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment