வனக்காவலர் தேர்வு முடிவு எப்போது?வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 13, 2019

வனக்காவலர் தேர்வு முடிவு எப்போது?வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு

வனக்காவலர் பணிக்காக நடத்தப்பட்ட, ஆன்லைன் தேர்வு முடிவுகள், அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்படும்' என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.



தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுகள், இம்மாதம், 4, 5, 6ம் தேதிகளில் நடந்தன. 

இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தேர்வின், மதிப்பீட்டு பணி நடந்து வருகிறது. இதன் அடிப்படையில், தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகளில், வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஈடுபட்டுள்ளது. இதற்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப் பட்டுள்ளது.


இதன்படி, நவம்பர் நான்காவது வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரி பார்த்தல், உடற்தகுதி ஆய்வு, உடற்தகுதி தேர்வு போன்றவை, சென்னையில் நடக்கும்.இதன்பின், நவ., 30க்குள், தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment