உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ளார்.
அதற்குள், அயோத்தி உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளில், அவர் தீர்ப்பளிக்கவுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அடுத்த மாதம், 17ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.
அதற்குள், அவர் தலைமையிலான அமர்வு, சில முக்கிய வழக்குகளில் தீர்ப்பளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறியதாவது:
தீபாவளி விடுமுறை முடிந்து, உச்ச நீதிமன்ற அலுவல், அடுத்த மாதம், 4ல், மீண்டும் துவங்குகிறது. அதற்கு பின், 11 மற்றும் 12ம் தேதி விடுமுறை நாட்கள்.எனவே, தலைமை நீதிபதி ஓய்வு பெறும் தேதியை கணக்கிடும்போது, இன்னும் எட்டு வேலை நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்த எட்டு நாட்களில், அயோத்தி வழக்கு, காங்கிரஸ், எம்.பி., ராகுலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தின் சீராய்வு மனு ஆகியவை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கவுள்ளது.
இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment