பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது.
இதனால் 13 அரசு பல்கலைக்கழகங்களில் ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களின் தகுதித் தேர்வு குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து கூடுதலான ஊழியர்களை வெளியேற்றுவதற்கு புதிய ஆசிரியர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு புதிய ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.
இதனால் கடந்த கல்வியாண்டில் இந்த தடை நீடித்து வந்தது. தற்போது இந்த தடையை விலக்கிக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பல்கலைக்கழகங்கள் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனால் 13 அரசு பல்கலைக்கழகங்களில் ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களின் தகுதித் தேர்வு குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து கூடுதலான ஊழியர்களை வெளியேற்றுவதற்கு புதிய ஆசிரியர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு புதிய ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.
இதனால் கடந்த கல்வியாண்டில் இந்த தடை நீடித்து வந்தது. தற்போது இந்த தடையை விலக்கிக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பல்கலைக்கழகங்கள் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment