தொடங்கியது 1000-வது டி20: ஒரே இன்னிங்ஸில் கோலி, தோனி சாதனையை முறியடித்த ரோஹித் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 3, 2019

தொடங்கியது 1000-வது டி20: ஒரே இன்னிங்ஸில் கோலி, தோனி சாதனையை முறியடித்த ரோஹித்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரோஹித் சர்மா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.


இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.


இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரின்போதே இருவரும் மாறி மாறி முதலிடத்தைப் பிடித்து வந்தனர். அந்தத் தொடரின் முடிவில் 2450 ரன்கள் எடுத்திருந்த கோலி முதலிடத்தை தன் வசப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று 2-வது பவுண்டரி அடித்ததன் மூலம் ரோஹித் சர்மா மீண்டும் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.


அதேசமயம், இந்த ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் அதிக டி20 ஆட்டங்களில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். மகேந்திர சிங் தோனி இதுவரை 98 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 99-வது டி20 ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் இந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

அதேசமயம், இது 1000-வது சர்வதேச டி20 ஆட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment