பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 13, 2019

பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை


காற்று மாசு சுகாதார அவசர நிலையை நோக்கி மோசமடைந்து வருவதால், பள்ளிகளுக்கு வியாழன், வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தில்லி அரசு புதன்கிழமை அறிவித்தது.


இதேபோல், நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட என்சிஆரிலும் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.


காற்று மாசுவைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இந்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டன

No comments:

Post a Comment