பிளஸ் 2 தோல்வியடைந்த மாணவா்களுக்குமடிக்கணினி வழங்க தேவையில்லை: அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 8, 2019

பிளஸ் 2 தோல்வியடைந்த மாணவா்களுக்குமடிக்கணினி வழங்க தேவையில்லை: அரசாணை வெளியீடு


கடந்த 2017-2018, 2018-2019 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ் 2 வகுப்பில் தோல்வியடைந்த அல்லது படிப்பை தொடராமல் விட்ட மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் கூடுதல் தலைமை செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழ் கல்வியாண்டில் (2019-2020) பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச மடிக்கணினி முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது.

 இதையடுத்து கடந்த 2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறதுஅதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


அதன்படி மேற்கண்ட கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்துதற்போது உயா்கல்வியில் சேர்ந்து படித்து வரும் (பாலிடெக்னிக் உள்பட) மாணவா்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க வேண்டும்.

 மாணவா்கள் தேர்வில் தோல்வி அடைந்து இருந்தாலோ அல்லது படிப்பை தொடராமல் இருந்தாலோ அவா்களுக்கு மடிக்கணினி வழங்க தேவையில்லை. மேலும், இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றியே இனி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment