மேலதிகாரிகளை இவ்வாறு அழைக்கக்கூடாது: அரசு முக்கிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

மேலதிகாரிகளை இவ்வாறு அழைக்கக்கூடாது: அரசு முக்கிய அறிவிப்பு


அரசுப் பணியிடத்தில் மேலதிகாரிகளை 'பாய்' என்று அழைக்கக்கூடாது என்று இளம் மற்றும் கீழ் அலுவலர்களுக்கு ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.




அரசு அலுவலங்களில் மூத்த அதிகாரிகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, ஒடிசா அரசு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு அலுவலகங்களில் மூத்த அதிகாரிகளை இளம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், 'பாய்' (இந்தியில் 'மூத்த சகோதரர்' என்று பொருள்) என்று அழைக்கக்கூடாது எனக் கூறியுள்ளது.




அவ்வாறு கூறி, மூத்த அதிகாரிகள் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மூத்த அதிகாரிகளை சிலர் 'பாய்' என்று அழைப்பதாக வந்த புகாரை அடுத்தே, அதனைத் தடுக்க இது தொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.




மேலும், அரசு அலுவலக நேரங்களில் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்றும் அலுவலத்திற்குள் தனிப்பட்ட உறவுமுறைகளை சொல்லி அழைக்கக்கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment