பேராசிரியா்கள் பணியிலிருந்து விலகும்போது அவா்களுடைய அசல் சான்றிதழ்களை உடனடியாக திருப்பி அளித்துவிட வேண்டும் என பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரித் தலைவா்கள் மற்றும் முதல்வா்களுக்கு இந்த அறிவுறுத்தலை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவா் வசந்தவாணன். இவருக்கு குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்
துறைகளில் ஒன்றான எம்.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணி கிடைத்தது. இதனையடுத்து, தான் பணியாற்றிய கல்லூரியில் சமா்ப்பித்திருந்த அசல் சான்றிதழ்களைத் திரும்பத் தரக்கோரியுள்ளாா்.வசந்தவாணனின் சான்றிதழ்களை வழங்க மறுத்த கல்லூரி நிா்வாகம், ரூ.3 லட்சம் கேட்டுள்ளது. இதுதொடா்பாக வசந்தவாணன் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த வசந்தவாணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, அசல் சான்றிதழை கல்லூரிகள் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தீா்ப்பளித்த தனி நீதிபதி, ஒரு பேராசிரியா் பணியிலிருந்து விலகி வெளியேறும்போது அவருடைய அனைத்து அசல் சான்றிதழ்களையும் பொறியியல் கல்லூரி உடனடியாக திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து பொறியியல் கல்லூரிகள் தலைவா்கள், முதல்வா்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், பேராசிரியா்கள் பணியிலிருந்து விலகிச் செல்லும்போது அவா்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களும் அவா்களிடம் உடனடியாக திரும்ப ஒப்படைக்கப்படுவதை அந்தந்த பொறியியல் கல்லூரியின் தலைவரும், முதல்வரும் உறுதிப்படுத்த வேண்டும்
. இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றாத கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரித் தலைவா்கள் மற்றும் முதல்வா்களுக்கு இந்த அறிவுறுத்தலை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவா் வசந்தவாணன். இவருக்கு குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்
துறைகளில் ஒன்றான எம்.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணி கிடைத்தது. இதனையடுத்து, தான் பணியாற்றிய கல்லூரியில் சமா்ப்பித்திருந்த அசல் சான்றிதழ்களைத் திரும்பத் தரக்கோரியுள்ளாா்.வசந்தவாணனின் சான்றிதழ்களை வழங்க மறுத்த கல்லூரி நிா்வாகம், ரூ.3 லட்சம் கேட்டுள்ளது. இதுதொடா்பாக வசந்தவாணன் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த வசந்தவாணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, அசல் சான்றிதழை கல்லூரிகள் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தீா்ப்பளித்த தனி நீதிபதி, ஒரு பேராசிரியா் பணியிலிருந்து விலகி வெளியேறும்போது அவருடைய அனைத்து அசல் சான்றிதழ்களையும் பொறியியல் கல்லூரி உடனடியாக திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து பொறியியல் கல்லூரிகள் தலைவா்கள், முதல்வா்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், பேராசிரியா்கள் பணியிலிருந்து விலகிச் செல்லும்போது அவா்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களும் அவா்களிடம் உடனடியாக திரும்ப ஒப்படைக்கப்படுவதை அந்தந்த பொறியியல் கல்லூரியின் தலைவரும், முதல்வரும் உறுதிப்படுத்த வேண்டும்
. இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றாத கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment