நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது ரஜினி ரசிகரான தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை பனகல் சாலையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, பகுதிவாரியாக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டுறவு வங்கி முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றம் நடைபெறவுள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர்களை மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் முதலமைச்சரிடம்தான் உள்ளது என்று தெரிவித்தார்.
மதுரை பனகல் சாலையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, பகுதிவாரியாக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டுறவு வங்கி முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றம் நடைபெறவுள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர்களை மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் முதலமைச்சரிடம்தான் உள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment