அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 27, 2019

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆயிரத்து அறுபது விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிக்டெக்னிக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இயற்பியல், வேதியல், கணிதவியல் உள்ளிட்ட பாடப்பரிவுகளுக்கு ஆயிரத்து அறுபது (1,060) விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


துறைரீதியாக காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள டி.ஆர்.பி., தகுதியுடையவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment