ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 17, 2019

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்


வேலூர் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஊராட்சி செயலாளர்

காலியிடங்கள்: 50


சம்பளம்: மாதம் ரூ.15,900

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி அருந்ததியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களுக்கும் அழைப்புக்கடிதம் விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), ஆலங்காயம் வட்டாரம், வேலூர் மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.11.2019

No comments:

Post a Comment